தருமபுரி, மே 9- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சத்துணவு அங்கன்வாடி ஊர்ப் புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலி யர்கள், கிராம உதவியாளர்கள் வன ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்க வேண்டும். சுமார் 4 லட்சத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங் களை நிரப்பவேண்டும். ஜனவரி முதல் வழங்கவேண்டிய 3 சதவிகித அக விலைப்படியை வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் எம்.குமரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலா ளர் ஏ.சேகர், மாவட்ட துணைத் தலை வர் ஆர்.ஜெயவேல், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ச.இளங்கும ரன், மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் தாரா உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு நில அளவை அமைப் பின் மாவட்ட தலைவர் ஆர்.கல்பனா தலைமை வகித்தார். தருமபுரி கருவூ லத்துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கருவூலஙத் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித் தார். தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் சங்கத்தின் வட்ட தலைவர் ராஜ் கண்ணு, வட்ட செயலாளர் பன்னீர்செல் வம், வேளாண் அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி ஆகியோர் பங்கேற்றனர். பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன், வட்ட செயலாளர் மாணிக்கம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். காரிமங்க லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் தேவகி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கே. புகழேந்தி, நிர்வாகிகள் சஞ்சீவன், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பிர பாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயவேல், வட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர். பாப்பிரெட்டிபட்டியில் வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தீ.சண்முகம் சிறப்புறையாற் றினார். அரூரில் வட்ட செயலாளர் அழ கிரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் செந் தில்குமார், மாவட்ட பொருளாளர் நட ராஜன், வருவாய்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனபால், தொழிற் பயிற்சி அலுவலக உதவியாளர் மற் றும் அடிப்படை ஊழியர் சங்க தலைவர் ரவி, பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன், நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சேலம்
சேலம் நாட்டாண்மை கழக கட்டி டம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.திருவரங்கன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.ஜெ.கண்ணன், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஆதித்தன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி கள் சுப்பிரமணியம், சுகுமார், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், மாநில நிர்வாகி ஏ.கோவிந்தன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.