தில்லி குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுதி குழு உறுப்பினர் கே.வெங்கடய்யா தலைமையில் திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.