districts

சென்னை முக்கிய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தை   பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம், டிச.3- பெஞ்சல் புயலின் கோர தாண்ட வத்தால் மாவட்ட மக்களின் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் விழுப்பு ரம் மாவட்டச் செயலாளர் ஆர். டி.முருகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பெஞ்சல் புயலின் விளை வாக பெய்த கடும் மழையால் விழுப்புரம் மாவட்டம் முழு மைக்கும் உள்ள விவசாயிகள், பொது மக்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும் பல வீடுகள் இடிந்து விழுந்தும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. நெல், உளுந்து, பனிபயிறு, வாழை, கரும்பு, மற்றும் தோட்டக்கலை துறையைச் சார்ந்த பயிர்கள் முழுமை யாக பாதிக்கப்பட்ட, முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.  மாவட்டத்தில் ஏரிகள்  உட்பட பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி உடைந்துள்ளது. இதனால், விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.  தென்பெண்ணை ஆறு, பம்பை யாறு, சங்கராபரணி,  ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  பல  இடங்களில் தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக ஒன்றிய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ. 35 ஆயிரம், உளுந்து, பாசிப்பயிறு உள்ளிட்ட தானிய பயிர் வகைகளுக்கு ரூ. 30 ஆயிரம் மற்ற பயிர்களுக்கு இழப்பீட்டிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். இடிந்த கிணறு, வீடுகள், கோழிப்பண்ணை, வெள்ளம் புகுந்த வீடுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.

கனரா வங்கி தலைமை  பொது மேலாளர் பொறுப்பேற்பு

சென்னை, டிச.3- கனரா வங்கி சென்னை வட்ட அலுவலகத்தின் புதிய தலைமை பொது மேலாளராக கே.ஏ. சிந்து பொறுப்பேற்றுள்ளார். வங்கியின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட கே. ஏ. சிந்து இந்த பொறுப்பினை ஏற்றார். வங்கியில் பல்வேறு துறைகளில் பணியாற்றி, திறமையான நடவடிக்கைகள், தொலைநோக்கு செயல்பாடு மூலம் கே.ஏ. சிந்து பாராட்டு பெற்றார். சென்னை சர்க்கிள் தலைமை பொது மேலாளராகவும், வணிக வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவையில் அவர்களுக்கு திருப்தியான சேவை, செயல்பாடுகளில் சிறப்பு போன்றவற்றை அடைய இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிந்து தெரிவித்தார்.

குளத்தில் தவறி விழுந்த மாணவர் பலி

சென்னை, டிச.3- வியாசர்பாடி பெரியார் நகர் திருச்சி சின்னசாமி தெருவை சேர்ந்த ஜாக் டேனியல் மாலை ஓட்டேரி மங்கள புரம் சேமாத்தம்மன் கோயில் அருகில்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கிரிக்கெட் பந்து, சேமாத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் போய் விழுந்துள்ளது. ஜாக் டேனியல் அந்த பந்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி குளத்தில் விழுந்துள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்த போதும் அவர்களால் முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மழைக்கால மீட்பு படை வீரர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து ஜாக் டேனியலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது மருத்துவர்கள், ஜாக் டேனியலை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சூனாம்பேட்டில் அரசு மாணவர் விடுதியில் தேங்கியுள்ள மழைநீர்

செய்யூர், டிச.3- சூனாம்பேட்டில் உள்ள அரசு மாணவர் விடுதி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதனால், மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சி இல்லீடு பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதியில் சூனாம்பேடு ஊராட்சி அரசு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாண வர்கள் தங்கி உள்ளனர். பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த விடுதி சுற்றி நான்கு புறமும் சுற்றுச் சுவர் எழுப்பட்டுள்ளது. இந்த விடுதி வளாக பகுதி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதாலும் விடுதியின் பின்னால் ஏரி அமைந்துள்ளதாலும் ஆண்டுதோறும் சிறு மழை பெய்தாலும் வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி தேங்கி விடுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு இங்கு தங்கும் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனால், மாணவர்கள் வளாகத்தில் நடமாட தயக்கம் காட்டி வருகின்றனர். தாழ்வாக உள்ள இந்த விடுதி வளாகத்தில் மண் நிரப்பி நிலத்தின் உயரத்தை அதிகரித்து தர வேண்டும் என மாண வர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் அதற்கான நட வடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. , மாணவர்கள் பாது காப்பு நலன்கருதி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை

புதுச்சேரி, டிச.3- புதுச்சேரியில் 22 பள்ளிகளுக்கு மட்டும் புதனன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல், கடந்த 30-ந்தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு, புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. அப்போது, ‘பெஞ்சல்’ புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.  கடலூர்   கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை  தொடர்ந்து  மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

புயல்-மழையால் பாதிப்பு: சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

திருவண்ணாமலை, டிச.3- பெஞ்சல் புயல் மழை பாதிப்பு  சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட செய லாளர் ப.செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெஞ்சல் புயல் பாதிப்பால் திரு வண்ணாமலை மாவட்டத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் பயிர்கள், கரும்பு, பூ, மணிலா நீரில் மூழ்கி உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை துரிஞ்சா புரம், கலசப்பாக்கம் மேல் சோழங்குப்பம், கீழ்பென்னாத்தூர், செங்கம் பகுதிகளில் கூடுதலாகவும், மற்றும்  தண்டராம்பட்டு,  போளூர், செய்யாறு, வந்தவாசி தெள்ளார், சேத்துப்பட்டு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்கள் நீரில் மூழ்கியுள்ளது. போளூர்,படவேடு, செங்கம் பகுதி யில் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை நாசமாகி உள்ளது. மாவட்டம் முழுவதும், 75 க்கும் மேற்பட்ட கால்நடை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளது. 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.  செங்கம், நொச்சிமலை, நாச்சிப்பட்டு, ஏரிகள் சேதமும்,  கேட்டவரம்பாளையம் இரட்டை ஏரி விரிசல் ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்  பெருக்கு ராயண்டபுரம் - தண்டராம்பட்டு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இரண்டு பகுதியில் அரிப்பு ஏற்பட்டு உடைந்து உள்ளது. மக்கள் 5 கிராமத்திலிருந்து  வெளியே வரமுடியாத சூழல்  ஏற்பட்டுள்ளது.  பள்ளியம்பட்டு கிராமத்தில்  தார் சாலையில் இடி விழுந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கம். படி அக்ரஹாரம் கிராமத்தில்  நான்கு வயது சிறுவன் ஓடையில் அடித்துச் சென்றதால் மரணம்,   செங்கம் தொரப்பாடி யில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்.  என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,  குடியிருப்புக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, இடிந்து விழுந்த வீடுகளுக்கும், கால்நடைகளுக்கு  உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.  புயல் ம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் வழங்க வேண்டும். ஏரிகள் கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில்  சிறப்பு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி,டிச.3- பெஞ்சல் புயலால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கி யுள்ளது. இதனால், தொற்று நோய் எதுவும் பரவாமல் தடுக்கும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரு கிறது. இம்மருத்துவ முகா மில் காய்ச்சல்,சளி பரி சோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கான பரி சோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் 9 வட்டாரங்களில் உள்ள 54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.மருத்துவ முகாமின் மூலம் 1,209 நபர்கள் மருத்துவ பரி சோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இதேபோன்று கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம்,கரியலூர், திருக்  கோவிலூர், தியாகதுருகம், திரு நாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் தலா 6 இடங்கள் வீதம் என மொத்த 54 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற்று வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரி வித்துள்ளார்.

எச்.ராஜாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு தொடுப்பது நியாயமா?

சென்னை, டிச. 3- பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்ன எச்.ராஜா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி போராடி யவர்கள் மீது வழக்கு தொடுப்பது நியாயமா என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் வட சென்னை மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், செயலாளர் ஜி.நித்திய ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது. பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று சொன்ன எச்.ராஜாவுக்கு 6  மாதம் சிறை தண்டனை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் தலைவர் களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து தமிழ்நாட்டில் நச்சுக் கருத்துக்களை யும், மக்கள் ஒற்றுமையை சீர்குலை க்கும் வகையிலும் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நேசிக்கப்படும் பெரியார் சிலையை உடைப்பேன் என கடந்த 2018ஆம் ஆண்டு எச்.ராஜா பேசியதற்கு எதிரான வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சொந்த  ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள் ளார். இவர் அவ்வாறு பேசும் போது தமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  வடசென்னை மாவட்டம் சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடத்தி யதற்கு எதிராக 6  ஆண்டுகள் கழித்து  காவல்துறை வழக்குப்பதிவு செய்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தந்தை பெரியார் குறித்து அவதூறா கவும், இழிவுபடுத்தும் வகையில் சிலை களை உடைப்பேன் என பேசிய குற்றவாளி எச்.ராஜா தண்டிக்கப்படு வது நியாயமானது, வரவேற்கத்தக் கது. ஆனால் அவரது அவதூறு பேச்சுக்கைளை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தமிழ்நாடு காவல் துறையின் என்ன வகையான அணுகு முறை என்பது புரியவில்லை. பெரி யாரை அவமதித்ததற்கு எதிராக போராடுவது குற்றமா? குற்றமிழைத்த வர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்படு வார், நியாயமாக போராடிய வாலிபர் சங்கத்தினர் தண்டிக்கப்படுவார்களா? எனவே தமிழ்நாடு அரசு உடன டியாக தலையிட்டு வாலிபர் சங்கத்தின் வட சென்னை நிர்வாகிகள் கே.எஸ். கார்த்தீஷ் குமார், எல்.பி.சரவணத் தமிழன், ச.முருகேசன், ஜுஹைப் முஜாஹித் உள்ளிட்ட 10 பேர் மீது ஆறு ஆண்டுகள் கழித்து பதிவு செய்யப்பட்டி ருக்கும் இந்த பொய் வழக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.