தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 2வது மாநாட்டு பேரணி பொதுக்கூட்டம் ஞாயிறன்று (ஜூலை 24) திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி பேசினார். மாநில துணைச் செயலாளர்கள் தோ.வில்சன், எஸ்.கே.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.மனோண்மணி, பொருளாளர் என்.மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.