விழுப்புரம், ஜன. 1 - விழுப்புரம் அருகே பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் குடும்பத்தினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விழுப்புரம் மாவட்டம கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மகேந்திரன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வருகிறார். இவர் சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல் ஆய்வா ளர் அடித்து இழுத்து சென்றுள்ளனர். கோலிய னூரில் உள்ள பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரின் பெற் றோர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சங்கரன், தலைவர் எஸ்.முத்துக்குமரன், சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.அறிவழகன், தலைவர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் நேரில்சந்தித்து ஆறுதல் கூறினர்.