districts

அரசு பேருந்துக்கு மாறிய ஆம்னி பேருந்து பயணிகள்

சென்னை,அக்.26-  பண்டிகை கால தொடர் விடு முறையையொட்டி வெளியூர் செல்லும்  ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் புகார் எழுகிறது. ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளுக் கிடையே கட்டண வேறுபாடு மிகுதியாக இருந்தது. அரசு பேருந்துகளில் சென்னை யில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல ரூ.550 கட்டணம். ஆம்னி பேருந்துகளில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வசூலித்தனர். குடும்பமாக செல்லும்போது ரூ.10 ஆயிரம் வரை பயணத்திற்கு ஒரு முறை செலவிட வேண்டிய நிலை உள்ளது. பல மடங்கு கட்டண உயர்வால் இந்த முறை ஆம்னி பேருந்துகளை மக்கள் அதிகம் நாடவில்லை. மாறாக அரசு விரைவு  மற்றும்  சிறப்பு பேருந்துகள் பக்கம் படை யெடுத்தனர். ஆம்னி ஏ.சி.பேருந்தில்  ஒருவர் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.3000 வரை கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. ஆனால் அரசு பேருந்துகளில் ரூ.1000க்கும் குறைவாகத்தான் கட்டணம் உள்ளது. மேலும் இந்த முறை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டதும் ஆம்னி பேருந்து பயணி கள் அரசு பேருந்துகளுக்கு திரும்ப  முக்கிய  காரணமாகும்.