districts

img

3 குழந்தைகளின தாய் தற்கொலை

கள்ளக்குறிச்சி, மே 18 – உளுந்தூர்பேட்டை அருகே மூன்று குழந்தை களின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம்  இருப்பதாக தாய் அளித்த  புகாரின் பேரில் காவல்துறை யினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளை யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  விஜயகுமார் தச்சு வேலை செய்து வரும் இவருக்கு மனைவி சுகன்யா (30) மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவரது மனைவி சுகன்யா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து  வந்துள்ளார் இந்த நிலை யில் நேற்று இரவு வழக்கம் போல் கணவன் மற்றும் குழந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர். இதனிடையே மூத்த மகள் இயற்கை உபாதை கழிக்க தாயை எழுப்ப வந்த போது அவர்  சமையல் அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் தந்தையை எழுப்பி உள்ளார்.  கதறி அடித்துக் கொண்டு எழுந்த விஜயகுமார் தூக்கில் தொங்கிய சுகன் யாவை கயிற்றினை அறுத்து  108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரது உடலை பரிசோதித்த செய்த மருத்துவர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து  விட்டதாக தெரிவித்துள் துள்ளார். இதனையடுத் தகவல் அறிந்து வந்த சுகன்யாவின் தாய் இறந்த  கிடந்த மகளின் உடலைக்  கண்டு கதறி அழுத நிலையில்  தனது மகள் சாவில் சந்தே கம் இருப்பதாக முத்து லட்சுமி  உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் சுகன்யாவின் உடலை  கைப்பற்றிய உளுந்தூர் பேட்டை போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்ற னர் மூன்று குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.