districts

வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் ஆய்வு

 ராணிப்பேட்டை, ஆக. 24 -  

      நெமிலி மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி வியாழனன்று (ஆக. 24) ஆய்வு செய்தார்.

       பனப்பாக்கம் பேரூராட்சி வார்டு-1 தந்தை பெரியார் நகர், வார்டு-2 வேல்முருகன் நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சாலைகள் மற்றும் பூங்கா, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் செயல்பாட்டு பணிகளை பார்வையிட்டார். உடன் பேரூராட்சி உதவி இயக்குநர் கணேசன், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உள்ளனர்.

    நெமிலி ஒன்றியம் துறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா ? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

    நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட நெடும்புலி கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சிப்காட் நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலா தேவி, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.