கள்ளக்குறிச்சி,ஜூலை 26-
குறட்டை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துள்ளது
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சிமை லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் வயது 7. அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி 2- ஆம் வகுப்பு படித்து வரும் ராஜேஷ், கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞான வேல் மற்றும் மயக்க மருந்து மருத்துவர்கள் மகேந்திர வர்மன், தினேஷ், சிலம்பர சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.
தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எல வனாசூர் கோட்டை கீழப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (27) பொறியியல் பட்ட தாரி. இவருக்கும் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தலைவலி, கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கில் இருந்து காளான் கண்ணுக்குள் ஊடுருவியது அகற்றினர்.
சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகி யோருக்கு குறட்டை வியாதி இருந்தது.
இந்த மூவரும் கள்ளக் குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ எண்டோஸ் கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனை வருக்கும் தமிழ்நாடு அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட் டுள்ளது”என்றார்.
தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனை கண் காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழ மலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் உடனிருந்த னர்.