புதுதில்லி, ஜூலை 29- அதிமுக-விலிருந்து நீக்கியதை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக் கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல் வம் தொடர்ந்த மேல்முறை யீட்டு வழக்கு உச்சநீதிமன்ற த்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு ஜூலை 29 வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுக் குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளன; கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ‘‘அதி முகவின் அடிப்படை விதி களை மீறி அத்தனை முடிவு களையும் பொதுக்குழுவில் எடுத்தனர். அடிப்படை விதி களை மீறி பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. ஓ.பன்னீர்செல்வத் தை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். 11 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’’ எனவாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் பாலாஜி சீனிவாசன், “அதிமுகவின் செயல்பாடு களை ‘‘ஸ்தம்பிக்க வைக்க’’ பன்னீர்செல்வம் வெறுக்கத் தக்க மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடு பட்டார். பன்னீர்செல்வம் கட்சிப் பிரச்சனைக்காக நீதி மன்றத்தை நாடியுள்ளார். இதன் மூலம் பொதுக்குழுக் கூட்டம் நடப்பதை தடுக்க முயற்சிக்கிறார்’’ என்றார். விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் - எடப் பாடி பழனிசாமி தரப்பினர் மீண்டும் இணைய வாய்ப் புள்ளதா என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு வாய்ப் பில்லை என்று இரு தரப்பி லும் பதில் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கூறுகையில், “இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் வைத்திருப்ப தற்குப் பதில், நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளால் பாதிக்கப்படாமல், இந்த விஷயத்தை ‘‘புதிய பரி சீலனைக்காக” உயர்நீதி மன்றத்திற்கு திருப்பி அனுப்புவது அவசியம். இந்த விஷயத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றத் தை நாங்கள் கேட்டுக்கொள் கிறோம். அதாவது மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அது வரை தற்போதைய நிலையே தொடரும்’’ என்றும் உத்தரவிட்டனர்.