போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே. சரவணன், மாவட்ட பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மணி,மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தங்கசாமி ஆகியோர் பங்கேற்று காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து பேசினர்.