சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு சென்னையில் மறு குடியமர்வு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக அண்மையில் 178 குடும்பங்களுக்கு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே சேகர்பாபுவை கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எம்.வி.கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, இ.சர்வேசன், கே.முருகன், வே ஆறுமுகம், துறைமுகம் பகுதி செயலாளர் எம்.ஜலாலுதீன் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.