செங்கல்பட்டு, ஏப். 22- செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கொளவாய் ஏரி பகுதியில் கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் மையம், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் நுழைவாயிலாகவும் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில் நிலைய சந்திப்பதாகவும் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி களில் தற்போது மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டிலிருந்து மின்சார ரயில் சென்னைக்கு இயக்கப்படு வதாலும் செங்கல்பட்டு ரயில் நிலையம் பொதுமக்களுக்கு மிக அவசியமானதாக மாறியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி வேலைக்கு, ஆசிரியர், அரசு ஊழியர்கள்,
பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் செங்கல் பட்டு ரயில் நிலையத்தை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இருசக்கர வாகனங்களில் ரயில் நிலையம் வந்து வாகனங்களை நிறுத்துவது, பயணச்சீட்டு எடுப்பது என நகருக்குள் வந்து செல்கின்ற னர். இதனால் நகருக்குள் ஜிஎஸ்டி சாலை யில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை குறைத்திட ஏதுவாக ரயில் நிலைய கிழக்கு பகுதியில் கொளவாய் ஏரி ஓரத்தில் உயர் அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் பயணச்சீட்டு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் செங்கல்பட்டு நகருக்குள் வராமல் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல ஏதுவாக இருக்கும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கரிடம் கேட்ட போது, தமிழ்நாடு அரசு பொது மக்களின் நலன் காத்திடும் வகையில் மக்கள் கோரிக்கையின் முக்கியத் துவம் கருதி பொதுப்பணித்துறையின் அனு மதி பெற்று கொளவாய் ஏரியின் நீர் கொள்ள ளவு பாதிக்காத வகையில் உயர் அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.