திருவள்ளூர், ஆக 24- இருளிப்பட்டு சூப்பர் பில் தொழிலாளர் களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், 48 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்த மான சூழலில் பில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது உரிமை களுக்காக சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். இதையடுத்து நிர்வாகம் சங்க நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் பல்வேறு வகைகளில் தொழிற் சங்கத்தை தொடங்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கடிகளை கொடுத்துவந்தது. இதனைக் கண்டிக்கும் வகையிலும் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளியன்று (ஆக.23), தொழிலாளர்கள் தங்களது குடும்பத் தினருடன் தொழிற்சாலை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சங்கம் அமைத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியமர்த்த நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆண்டு தோறும் அரசு நிர்ண யம் செய்யும் அகவிலைப்படி வழங்கப்படும், அடிப்படை சம்பளம் அகவிலைப்படி மாற்றி அமைக்க ஒப்புக்கொண்டதால் ரூ.1300 முதல் 1500 ரூபாய் வரை ஊதியம் உயரும். ரூ.21000 சம்பளத்திற்கும் பி.எப் பிடித்தம் செய்யப்படும், மருத்துவ காப்பீடு 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் போன்ற கோரிக் கைகளை நிர்வாகம் போது ஓப்புக் கொண்டது. இதனால் கடந்த 48 நாட்கள் நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து சனிக்கிழமையன்று (ஆக 24), அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர்.