சென்னை, ஜன. 9 - கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த விவரம் அளிக்காத 6 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத் ்துறையின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா பாதிப்பு அறிகுறி யுள்ளவர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். சென்னை மாநகரப் பகுதியில் 538 தனியார் மருத்துவமனைகள், 74 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இந்த தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் மின்னஞ்சல் வாயிலாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி சிகிச்சை பெற்றவர்களின் விவ ரங்களை வழங்காத 6 தனியார் மருத்துவ மனைகளுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகளிடமிருந்து ஜன.7ந் தேதி பெறப்பட்ட தகவலின்படி கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்தவமனைகளில் 960 பேரும், ஸ்கேன் மையங்களில் 199 பேரும் என 1,159 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அந்த நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 187 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.