கோடை வெயில்: காட்டன் துணிகள் விற்பனை ஜோர்
சென்னை, மே 4- நாளுக்கு நாள் அதி கரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க மக்கள் காட்டன் துணிகளை வாங்குவதால் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நட்டில் கடந்த ஒரு மாதமாக பல மாவட்டங்க ளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் நடுத்தர மக்கள், தங்களின் குடும்பச் சூழல் காரணமாக தொடர்ந்து கொளுத்தும் வெயிலிலும் பணிகளுக்கு சென்று வருகின்றனர். வெப்பத்தின் தாக் கத்தை சமாளிக்க மக்கள் அதிகளவில் காட்டன் துணியை பயன்படுத்த துவங்கியுள்ளணர். இதனால் காட்டன் துணி களின் விற்பனை சூடு பிடித் துள்ளது. இதுகுறித்து ராயபுரம் எம்.சி. ரோடு கடை உரி மையாளர்கள் கூறுகை யில், வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் காட்டன் துணி களையே விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வழக்கத்தை விட தற்போது காட்டன் டிராக் பேண்ட், பணியன், காட்டன் சட்டை, பேண்ட், லுங்கி, காட்டன் புடவைகள், சுடி தார், நைட்டி போன்றவற்றின் வியாபாரம் அதிகரித் துள்ளது என்றனர்.
கவாத்து பயிற்சி அதிகாரி ஆய்வு
ராணிப்பேட்டை, மே. 4 - ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமை யகத்தில் சனியன்று (மே. 4)) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப் பாளர்கள் உடனிருந்தனர்.
பெண்ணை கொலை செய்ய முயற்சி: போதை ஆசாமிகள் 5 பேர் கைது
சென்னை, மே 4- எம்.கே.பி.நகர் பகுதியில் பெண்ணை பாட்டில் மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் எம்.கே.பி. நகர் எஸ்.ஏ.காலனி 3ஆவது தெருவில் வசிப்பவர் கவிதா (24). இவர் வெள்ளிக்கிழமை (மே3) இரவு வீட்டில் இருந்த போது,, வீட்டு வாசலில் சுமார் 5 பேர் மது அருந்திக் கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். உடனே கவிதா இங்கு ஏன் மது அருந்திக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அனை வரும் எழுந்து செல்லுங்கள் எனக் கூறி யுள்ளார். உடனே 5 பேரும் கவிதாவை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டில்கள் மற்றும் கற்களால், தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து கவிதா எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கொலை முயற்சி, தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் தகராறு செய்தது வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3ஆவது தெருவைச் சேர்ந்த கரண் (19), அவரது சகோதரர்கள் பிரசாந்த் (22), குணா (எ) குணசேகரன் (25), வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த நண்பர்கள் வசந்த குமார் (22), வியாசர்பாடி இந்திரா நகரைச் சேர்ந்த பரத்ராஜ் (23) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரை யும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குணா (எ) குணசேகரன், வசந்தகுமார் ஆகியோர எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், கரண் மற்றும் வசந்தகுமார் மீது தலா 8 குற்ற வழக்குகளும், குணா (எ) குணசேகரன் மீது 5 குற்ற வழக்குகளும், பிரசாந்த் மீது 3 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புகின்றனர் ஐபிஎல் களையிழக்கும் அபாயம்
அதிரடி பேட்டிங்கால் கடந்த காலங்க ளை விட நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வீரர்களின் பயமில்லா ஆட்டத் தால் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளும் இறுதி ஆட்டத்துக்கு இணையான அளவில் பர பரப்புடன் நகர்ந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளின் சுவாரஸ்யத்திற்கு சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. நடப்பு சீசனில் வெளிநாட்டு வீரர்கள் 60% அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டு வீரர் கள் அனைவரும் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடருக் கான தங்கள் நாட்டு அணியில் இடம்பிடித் துள்ளனர். புரியும்படி சொன்னால் ஐபிஎல் தொடரை ஒரு தகுதி சுற்றாக எடுத்துக் கொண்டு பெரும்பாலான வெளிநாட்டு கிரிக் கெட் வாரியங்கள் உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்துள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 வார காலமே உள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்க ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை, அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் விரைவில் பயிற்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள் ளன. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் முக்கிய நட்சத்திர வெளி நாட்டு வீரர்கள் இன்னும் ஒருவார காலத்தில் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் தனது சுவாரஸ்யத்தை இழக் கும் சூழல் உருவாகியுள்ளது.
பெண்ணை கொலை செய்ய முயற்சி: போதை ஆசாமிகள் 5 பேர் கைது
சென்னை, மே 4- எம்.கே.பி.நகர் பகுதியில் பெண்ணை பாட்டில் மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் எம்.கே.பி. நகர் எஸ்.ஏ.காலனி 3ஆவது தெருவில் வசிப்பவர் கவிதா (24). இவர் வெள்ளிக்கிழமை (மே3) இரவு வீட்டில் இருந்த போது,, வீட்டு வாசலில் சுமார் 5 பேர் மது அருந்திக் கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். உடனே கவிதா இங்கு ஏன் மது அருந்திக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அனை வரும் எழுந்து செல்லுங்கள் எனக் கூறி யுள்ளார். உடனே 5 பேரும் கவிதாவை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டில்கள் மற்றும் கற்களால், தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து கவிதா எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கொலை முயற்சி, தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் தகராறு செய்தது வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3ஆவது தெருவைச் சேர்ந்த கரண் (19), அவரது சகோதரர்கள் பிரசாந்த் (22), குணா (எ) குணசேகரன் (25), வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த நண்பர்கள் வசந்த குமார் (22), வியாசர்பாடி இந்திரா நகரைச் சேர்ந்த பரத்ராஜ் (23) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரை யும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குணா (எ) குணசேகரன், வசந்தகுமார் ஆகியோர எம்.கே.பி.நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், கரண் மற்றும் வசந்தகுமார் மீது தலா 8 குற்ற வழக்குகளும், குணா (எ) குணசேகரன் மீது 5 குற்ற வழக்குகளும், பிரசாந்த் மீது 3 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்
ராணிப்பேட்டை, மே. 04 - ராணிப்பேட்டை மாவட் டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் மகேந்திரவாடி ரயில் நிலை யம் இடையே தண்டவாளம் அருகே ஆண் சடலம் கிடப் பதாக ரயில்வே காவல் துறையினருக்கு வெள்ளி யன்று (மே. 3) தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி ரயில்வே போலீ சார் சடலத்தை மீட்டு விசாரனை நடத்தி்னர். விசாரனையில் தண்ட வாளத்தில் உயிரிழந்த நபர் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் அருந்ததி பகுதியை சோ்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் (வ. 63) என்பது தெரியவந்தது. இறந்து கிடந்த ஆனந்த னுக்கு சாந்தி என்ற மனைவி, 2 மகன் உள்ளதாகவும், மூத்த மகன் கூத்தம்பாக்கம் பகுதியில் கிராம உதவி யாளராக பணிபுரிவதும் தெரியவந்தது. இந்த நிலை யில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர்.
கடும் வெயில் பள்ளிகளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கிருஷ்ணகிரி, மே.4- தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறி வித்த பின்னரும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆணையை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரி களிலும் அமுல்படுத்த மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கேட்டுக் கொண்டுள்ளார், இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவ னம் செலுத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆணையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
12 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது
அம்பத்தூர், மே 4- சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்திலிருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி செல்வ தாக பூந்தமல்லி மதுவிலக்கு அம லாக்கப் பிரிவி காவல் துறையின ருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்கள் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்த போது, அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் தத்தளித்த புதுவை சிறுவனை மீட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்
சிதம்பரம், மே 4- புதுச்சேரி மாநிலம், மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த முனுசாமி- தீபா தம்பதியின் மகன் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரை பெற்றோர்கள் கண்டித்ததால் அவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தில் சிறுவன் கணேசேன் புதுச்சேரி யிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி சிதம்பரத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் திங்கள் கிழமை இரவு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இதனை கண்காணித்த அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பி னரான சின்னையனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது தாயாரின் செல் போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதால் அவரது தாயாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கணேசன் சிதம்பரத்தில் இருக்கும் தகவல் அறிந்த அவரது தந்தை மகிழ்ச்சி அடைந்து சிதம்பரம் சிபிஎம் அலுவலகம் வந்து மகனை அழைத்துச்சென்றார். இந்த தந்தை யின் மகிழ்ச்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறு வனின் தந்தை முனுசாமி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.