சென்னை, ஜூலை 19- மிகவும் ஆபத்தான இதயத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்ணை சென்னை காவேரி மருத்து வமனை மருத்துவர்கள் மூன்று மருத்துவ செயல் முறைகளை மேற் கொண்டு காப்பாற்றியி ருக்கிறார்கள். 55 வயதுடைய ஒரு பள்ளி ஆசிரியையான ராதா பாலாஜி, இம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சமீபத்தில் கடுமை யான இதய நோய் பாதிப்புடன் அழைத்து வரப்பட்டார். கடுமை யான மாரடைப்புடன் மெதுவான இதயத்துடிப்பு மற்றும் இருதய அதிர்ச்சி (உடலுக்குத் திறனுடன் ரத்தத்தை பம்ப் செய்வதற்கு இதயத் தால் இயலாத காரணத்தினால் ரத்த அழுத்தமானது ஆபத்தான அளவுக்கு குறைவதை விளைவிப் பது) போன்ற சிக்கல்கள் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவருக்கு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியும் மற்றும் அடைப்பு இருந்த ரத்தநாளத்தில் (வலது இதயத்தமனியில்) ஸ்டெண்ட்டும் பொருத்தப்பட்டன. இருதய அதிர்ச்சியின் காரணமாக, இந்த செயல்முறையை பாதுகாப் பாக மேற்கொள்வதற்கு இன்ட்ரா – ஆர்டிக் பலூன் பம்ப் என்ற சாதனத் தின் உதவி அவருக்குத் தேவைப் பட்டது. மருத்துவமனையின் இதய மின் உடலியங்கியல் மருத்துவத் துறையின் டாக்டர். தீப் சந்த் ராஜா –இதுகுறித்து கூறுகையில், இதயத்தின் இடப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வு சரிவு மற்றும் நீண்ட வீடி சிண்ட்ரோம் ஆகியவற்றின் காரணமாக, இப்பெண் ணின் நிலைமை மேலும் சிக்கலான தாக இருந்தது என்றார். சுமார் 6 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை யால் அவரது ரத்த அழுத்தமும், ரத்த ஓட்ட செயல்பாடுகளும் விரைவா கவே மேம்பட்டன. இத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படுவதிலிருந்து அவரைக் காப்பதற்காக சருமத்தின் ஊடாக டிஃபைபிரிலேட்டர் என்ற உதறல் நீக்கி சாதனம் அவருக்குப் பொருத் தப்பட்டது. 14ஆம் தேதி குண மடைந்த நிலையில் மருத்துவமனை யிலிருந்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார். ஆரம்பநிலை சிகிச்சைக்கான இதயவியல் நிபுணரான டாக்டர். சுந்தர் கூறுகையில் “உரிய நேரத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோ பிளாஸ்டி, ஒரு மிகப்பெரிய மார டைப்பு மற்றும் இருதய அதிர்ச்சியி லிருந்து இப்பெண்ணை காப்பாற்றி யது என்றார்.