சென்னை, ஏப். 24 - சென்னை கடற்கரை ரயில் நிலை யத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தன. பணி மனையில் இருந்து சென்ற ரயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ரயிலின் ஓட்டுநர் காயம் அடைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு அதி காரி, ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம். ஓட்டுநர் பத்திரமாக இருக்கிறார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் எந்தவித உயிரிழப்பும் ஏற்பட வில்லை. அதனால் ஒரு பெரிய விபத்து இல்லை. இருப்பினும், ரயில் ஓட்டுநர் கவனக் குறைவாக இருந்துள் ளார் என்றார்.