கிருஷ்ணகிரி, ஜூன் 2- எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்சி, எஸ்டி பிரிவுத் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆா்வமுள்ள புதிய தொழில் முனைவோர் வேளாண்மை தவிர உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன் உதவியோடு இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மானியத் தொகை மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு வழங்கப்படும். தவிர தொழில்முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சோ்ந்த தனிநபா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கிக் கடனாகவும், 35 விழுக்காடு அரசின் மானியமாகவும் வழங்கப்படும். இதனால் பயனாளிகள் தன் சார்பில் முதலீடாக எந்த நிதியும் செலுத்த வேண்டியதில்லை. தொழில் சார்ந்த பயிற்சியும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.