மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதிக்குழு உறுப்பினரும் திரைப்பட இணை இயக்குநருமான சு.திருமாறன் படத்திறப்பு, நினைவேந்தல் கூட்டம் க.விஜயசீலன் தலைமையில் அம்பத்தூர் மங்களபுரத்தில் சனிக்கிழமை (பிப். 25) நடைபெற்றது. இதில் ஆர்.கோபி, ஜி.மூர்த்தி, இ.பாக்கியம் (சிபிஎம்), மாரியப்பன், ஜெகநாதன் (சிபிஐ), வழக்கறிஞர் முரளிபாபு, ஆதி குரல் அந்தோணிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.