districts

கொரோனா விடுப்பட்ட மரணங்கள் குறித்து ஆய்வு: அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 16 - கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்கள் தொடர்பாக அரசு கொடுத் துள்ள புள்ளி விவரங்களில் பெருந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகா தாரத்துறை, வருவாய்த் துறை அறிக்கைகளை ஒப்பிடும்போது மரணங்க ளின் எண்ணிக்கை 17ஆயி ரம் அளவிற்கு வித்தியாசப் படுகிறது. தமிழகத்தில் சுகாதாரத் துறையால் தினசரி கொரோ னோவால் பாதிக்கப்படு வோர், இறப்போர், சிகிச்சை பெறுவோர், குண மடைந்தோர் எண்ணிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கையில் தொடக் கத்தில் பல்வேறு முரண் பாடுகள் காணப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்றாமல் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயி ரம் ரூபாயை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநிலப் பேரிடர் நிதியி லிருந்து இழப்பீடாக வழங்க  ஒன்றிய அரசு அறிவுறுத் தியது. உயிரிழந்தோர் குடும் பத்தினரின் விண்ணப் பங்களை மாவட்ட வரு வாய் அலுவலர்கள் தலை மையிலான குழு ஆய்வு செய்து நிதி வழங்குகிறது. இந்நிலையில் சில நாட்க ளுக்கு முன்பு இழப்பீடு பெறு வதற்கான கால அவகா சத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்தது. இதன்படி, மார்ச் 20ந்  தேதிக்கு முன்னர் ஏற்பட்ட  இறப்புகளுக்கு மனுதாரர் கள் மே.18ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட 90 தினங்க ளுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பெறப் பட்ட நாளிலிருந்து 30  தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என்று வரு வாய்த்துறை தெரிவித்துள் ளது. மேலும், இதுவரை இழப்பீடு பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற  தகவலையும் வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 74 ஆயிரத்து 97  விண்ணப்பங்கள் ஆன் லைன் வழியே பெறப்பட்டது. இதில் 13 ஆயிரத்து 204 விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளது. 55 ஆயிரத்து 390 விண்ணப்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட் டுள்ளது. சுகாதாரத் துறை வெளி யிடும் தினசரி கரோனோ அறிக்கையில் (ஏப்.14ந் தேதி நிலவரப்படி) 38 ஆயிரத்து 25 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதாவது உயிரிழந்தோர் எண்ணிக்கை சுகாதாரத்துறை தந்துள்ள விவரங்களை விட 17 ஆயி ரத்து 385 கூடுதலாக உள்ள தாக வருவாய்த்துறை விவரங்கள் தெரிவிக்கின் றன. இந்த புள்ளி விவரங்கள் கூட தவறாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து மருத்தும்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறுகையில், “இது குறித்து ஆய்வு செய்யப் படும்” என்று தெரிவித் துள்ளார்.