districts

img

புதிதாகக் கட்டப்பட்ட பாலம் சாலைகள் திட்டப் பணிகள் ஆய்வு

சிதம்பரம் நகராட்சி 13ஆவது வார்டு அனந்தீஸ்வரர் கோவில் தெருவில் பராமரிப்பு  இல்லாமல் இருக்கும் பூங்காவையும், காத்தா பிள்ளை சந்து பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு பாலம், அப்பகுதியில் உள்ள சாலைகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை நகர மன்றத் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துகுமரன் ஆகியோர் செவ்வாயன்று ஆய்வு செய்தனர். சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினா, பொறியாளர் மகாராஜன், நகரமன்ற கொறடா ஜேம்ஸ்.விஜயராகவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.