districts

img

போராடும் மாணவர்களை அச்சுறுத்தக் கூடாது இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 30 -

    கல்வி வளாகங்களில் மேம்பாட்டிற்காக, ஜன நாயக உரிமைகளுக்காக போராடும் மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பேரவை சனிக்கிழமையன்று (ஜூலை 29) சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கல்வி வளா கங்களில் ஜனநாயக உரி மையை நிலை நாட்ட வேண்டும், மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்,

    மாணவர் விடுதிகளை அதிகரிக்க வேண்டும், பல்  கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மறை முகமாக உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும், கல்லூரி வளாகங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், பாலியல் நட்புணர்வு குழுக் களை அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

   பேரவைக்கு மாவட்டத் தலைவர் வே.அருண் குமார் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பி னர் தமிழ் வரவேற்றார். இணைச் செயலாளர் விக்னேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொது சிவில் சட்டம் குறித்து வழக்கறிஞர் திரு மூர்த்தியும், தேசிய கல்விக் கொள்கை - 2020 குறித்து மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்ரவர்த்தியும் பேசினர். எதிர்கால பணி கள் குறித்து மாவட்டச் செய லாளர் எஸ். மிருதுளா பேசி னார். இணைச் செயலாளர் காரல் சே நன்றி கூறினார்.

   29 பேர் கொண்ட மாவட்ட குழுவின் தலைவராக வே.அருண்குமார், செய லாளராக எஸ்.மிருதுளா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.