சென்னை, ஜன. 19 - பழமை வாதத்தை புகுத்தும் நடத்தை விதிகள் குறித்து ஆட்சேபனை எழுப்பிய மாணவரை எம்சிசி கல்லூரி நிர்வாகம், கல்வியாண்டு முழுவதும் இடைநீக்கம் செய்துள்ளது. சிறந்த ஆளுமைகளை யும், சிந்தனையாளர்களை யும் மெட்ராஸ் கிருஸ்துவ கல்லூரி (எம்சிசி) உருவாக்கியது. தற்போ தைய கல்லூரி நிர்வாகத் தின் செயல்பாடு, அதன் பாரம்பரிய முற்போக்கு, ஜனநாயக விழுமியங்களி லிருந்து, தடம் மாறுகிறது. மாணவர்களுடன் மாணவிகள் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நடத்தை விதிகளை (கோட் ஆப் கான்டாக்ட்) நிர்வாகம் அறிவித்துள்ளது. மாண வர்களின் உரிமைகளை முடக்கி, பழமைவாதங் களைப் புகுத்துகிறது. இதனை ஆட்சேபித்த மாணவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மாணவர்களின் முற்போக்கு சிந்தனையை முடக்கா மல், அறிவியல் பூர்வமான வகையில் அணுகாமல், ஆட்சேபித்த மாணவர் களை விசாரணை என்கிற பெயரில் மன உளைச்ச லுக்கு உள்ளாக்கி உள்ள னர். குறிப்பாக, முதுகலை முதலாமாண்டு மாணவர் விவேக், மாணவி கிருத்திகா ஆகியோரை இந்த கல்வியாண்டு முழுவதும் இடை நீக்கம் செய்யதுள் ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக, மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. ஜனநாயக பூர்வ செயல்பாடுகளை முன்னெடுக்கும் மாணவர் களை குற்றவாளிகளைப் போல் நடத்துவது கண்டிக் கத்தக்கது. எனவே, கல்லூரி நிர்வா கம் இடைநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.