சிபிடி கல்லூரியில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயமடைந்தனர். தரமான பாதுகாப்பான கட்டிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.28) கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்வேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.