விழுப்புரம்,ஆக.14-
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சின்னதுரை அவரது தங்கை சந்திரா செல்வியை சக மாணவர்களே சாதிய ஆதிக்க வெறியால் கொலை வெறி தாக்குதல் நடத்தி யதை கண்டித்தும், மாண வர்களிடம் சாதி வேறுபாடு கலைந்து ஒற்றுமை உணர்வை, சமத்துவ சகோ தர உணர்வை வளர்த்திட வலியுறுத்தியும் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எச்.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சட்ட கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு மாணவர்கள், சாதி, மத, இன, மொழி, பாலின வேறு பாடின்றி மாணவர்களாய் ஒன்றிணைவோம் என்றும், வேற்றுமை உணர்வை தகர்க்க அனைவரும் கை கோர்போம் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய வாறு உறுதிமொழி ஏற்றனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அய்ய னார், ஹரிஷ்குமார் இள மாறன், மணிகண்டன் மற்றும் உதயா உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாதி, மதம், இனம், மொழி, பாலின பாகுபாடு இன்றி மாணவர்கள் ஒருங்கி ணைவோம் என சமத்து வத்திற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்த் சாமி கலந்து கொண்டு உறுதி மொழியை வாசிக்க மாண வர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.