districts

img

உலக பாரம்பரிய தினத்தில் ரயில் கண்காட்சியை ரசித்த மாணவர்கள்

சென்னை, ஏப். 23- உலக பாரம்பரிய தினத் தையொட்டி சென்னை ஐசி எப்பில் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஐசிஎப் தொழிற்சாலை பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்க 1955 ஆம் ஆண்டு சுவிட்சர் லாந்து நாட்டின் தொழில் நுட்பத்துடன் ஏற்படுத்தப் பட்டது. இது இந்திய ரயில்வேயின் முதன்மை தொழிற்சாலை ஆகும். சென்னையின் புறநகர் பகுதி யான பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற் படுத்தப்பட்ட இந்த தொழிற் சாலையில் தான் பயணி களுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு வழங்குவது மட்டுமல்லாமல் தாய்லாந்து, பர்மா, தைவான், பிலிப் பைன்ஸ், உகாண்டா, வியட் நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் ரயில் பெட்டி கள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இங்கிருந்துதான் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் தயாரிக்கப் பட்டது. மேலும் புல்லட் ரயில் களும் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் அண்மையில் சிறு மாதிரி ரயில் கண்காட்சி நடை பெற்றது. பல்வேறு ரயில் களின் மாதிரிகள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை சுமார் 2,500 பேர் கண்டு களித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள், சிறு வர்கள் ஆகும்.இதற்கு முன் ரயிலில் பயணம் செய்யாத பல குழந்தைகள் இந்த கண்காட்சியை பார்த்த பின்னர் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாக தெரி வித்தனர். மேலும் கண்காட்சி யில் மாணவர்கள் நிழற்படம் மற்றும் செல்பி எடுத்து மகி ழ்ந்தனர்.