districts

img

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை

சிதம்பரம், செப்.23- சிதம்பரம் அருகே சி முட்லூர் கிராமத்தில் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.  இந்த கல்லூரியில் இருவேலை பாடப் பிரிவுகளாக சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் 3500-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். சிதம்பரம் மார்கத்திலிருந்து  கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பிச்சாவரம் செல்லும் பேருந்தில் ஏறி மண்டபம் நிறுத்ததில் இறங்கி அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் கடலூர் மார்கத்திலிருந்து வரும் மாணவர்கள் தீத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 2.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. கல்லூரி நேரத்தின்போது பேருந்து வசதி போதுமனதாக இல்லை. இதனால்,மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், புறவழிச் சாலை என்பதால் அடிக்கடி விபத்திலும் சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே,எனவே, கல்லூரி நேரத்திலும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது இரு மார்க்கங்களிலும் கல்லூரி முன்பு அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்திய மாணவர் சங்கம் போராடி வருகிறது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லெனின் கூறுகையில்,“கல்லூரி நேரத்தின்போது பேருந்து இயக்க வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு, ஒருநாள் மட்டும்  8 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது” என்றார்.  கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சிலவற்றை கல்லூரி வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் கல்லூரி வழியாக பேருந்து இயக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

;