districts

img

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம், அக்.12- சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணி கள் துறை இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்து விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் குமார் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலு வலர் பழனிச் சாமி ஆகியோர் இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்றனர். பள்ளியின் முதல்வர் ரூபியால்ராணி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பிரபாகரன், முத்துக்குமார், சசிகுமார், சின்னப்பராஜ், பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.