districts

மாணவர்களுக்கு உடனே சான்று வழங்க கோரிக்கை

கடலூர், மே.19-

    கடலூர் மாவட்ட மாணவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துள்ளது.

   இதுகுறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் மேல் படிப்புக்கு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு வருமானம், சாதி, இருப்பிட சான்றிதழ் பெற வேண்டியுள்ளது.

   ஆனால் இ-சேவை மையங்களில் இணைய சேவை குளறுபடியால் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. விண்ணப்பித்த பிறகு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சி யர் சான்றுக்காக காத்து கிடக்கும் நிலை உள்ளது. சான்றிதழ் பெறுவதற்கு தாமத மாவதால் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வதற்கு காலதாமதம் ஆகிறது.

   எனவே தமிழ்நாடு அரசு கல்லூரி விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால அவ காசத்தை நீட்டிக்க வேண்டும். அனைத்து இ-சேவை மையங்களையும் முறைப்படுத்த வேண்டும். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரே நாளில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.