சிதம்பரம், பிப்.17- சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவரை ஆய்வக உதவியாளர் பாலியல் சீண்டலை செய்ததை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரு வேலை பாட பிரிவுகளாக 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த வாரம், மாணவி ஒருவருக்கு கல்லூரி யில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர் பாலியல் சீண்டல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை யடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி இந்திய மாணவர் சங்கத் தலைவர்களிடம் நடந்த விவரங்களை கூறினார். பிறகு, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா தலை மையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆய்வக உதவியாளர் சிதம்பரநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திங்களன்று (பிப்.17) கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும், இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் போராட்ட த்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா, மாநில துணைத் தலைவர் குமரவேல், சிவநந்தினி, கல்லூரி கிளைத் தலைவர் உதயா, செயலாளர் அன்பு உள்ளிட்டோர் உரையாற்றினர்.