சென்னை, நவ.15- பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவமனையிலிருந்து வாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்வை தாம்பரம் நகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் என். குமார், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் காமாட்சி நினைவு குழும மருத்துவனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்த ராஜன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள், செவிலி யர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி – இயக்குநர், டாக்டர் கே.எம். ராதா கிருஷ்ணன், டாக்டர் பிரவீண் சந்தர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தேசிய மருத்துவ நூலகக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலானோரை முடக்கும் நோயாக இது உள்ளதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.