சப்தர் ஹாஷ்மி நினைவு தினம், சர்வதேச பெண்கள் தினம் ஆகியவற்றையொட்டி சென்னை கலைக்குழு சார்பில் ஞாயிறன்று (மார்ச் 7) சைதாப்பேட்டையில் ‘பயணம்’ வீதி நாடகம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி-தென்சென்னை, தமுஎகச -சைதை கிளை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), நாடகவியலாளர் பிரளயன், இயக்குநர் ஆர்.ரவிக்குமார், முன்னணியின் மாவட்டத் தலைவர் கே.மணிகண்டன், செயலாளர் ச.லெனின், தமுஎகச மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், எழுத்தாளர் ராஜசங்கீதன், சாலக்குமார், ஓவியர் ஆரி உள்ளிட்டோர் பேசினர்.