districts

சென்னையில் வாக்குப்பதிவை நிறுத்தும் அளவுக்கு பிரச்சினை ஏற்படவில்லை காவல்துறை ஆணையர் பேட்டி

சென்னை, பிப். 19 வேளச்சேரியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிய 17 பேர் பிடி பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரி வித்துள்ளார். கானாத்தூரில் உள்ள பள்ளியில் தனது வாக்கை செலுத்திய பின்னர் செய் தியாளர்களிடம் அவர் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி மாநகராட்சியுடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். சில இடங்களில் மின்னணு  எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அவை உடனடியாக சரி செய்ய ப்பட்டன. தேர்தல் பாதுகாப்புக்காக 18 ஆயி ரம் காவலர்களும், போலீஸ் அல்லாத 4  ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலையில் இருந்து சின்ன சின்ன பிரச்சினைகள் மட்டும் ஏற்பட்டுள்ளன. அவைகளை உடனடியாக காவல் துறையினர் சரி செய்து விட்டனர். இது  தொடர்பாக பல இடங்களில் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பணப்பட்டுவாடா செய்தது, உணவு விநியோகித்தது ஆகிய புகார்களும் வந்துள்ளன. அதே  நேரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தும் அளவுக்கு இதுவரை எந்த பிரச்சினை யும் ஏற்படவில்லை.

திருவான்மியூரில் பூத் சிலிப்புடன் பணம் கொடுத்ததாக பெண் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரித்து வருகிறோம். போலீசார் தங்களிடம் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் விசாரித்து வருகிறார்கள். வேளச்சேரியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிய 17 பேர்  பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் 17 பேரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். வெளியூர்காரர்கள் தங்கியிருக்க கூடாது  என்கிற உத்தரவை மீறி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். அனைத்து இடங்களிலும் அதிகாரி கள் நேரடியாக பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான  அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களை கைப் பற்றும் அளவுக்கு எந்த இடங்களிலும் அசாதாரண சூழல் இல்லை. இருப்பி னும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார் கள். சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.