கடலூர்,மார்ச் 10- என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்எல்சி நிறுவனம். 2015 ஆம் ஆண்டு என்எல்சி இந்தியா நிறுவனமாக மாற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுரங்கங்கள் தெர்மல், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 6000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நவரத்தின நிறுவனமாக உரு வெடுத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 2000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனமாகும். நெய்வேலி யில் மட்டும் 10 ஆயிரம் நிரந்தர பணி யாளர்கள், 15,000 ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வரு கின்றனர். மேலும், நெய்வேலிக்கு வெளி யேயும் பல ஆயிரக்கணக்கான நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு 49 விழுக்காடும், 2006 ஆம் ஆண்டு 10 விழுக்காடும், 2013ஆம் ஆண்டு 5 விழுக்காடு என இந்த நிறுவனத்தின் பங்கு களை ஒன்றிய அரசுகள் விற்பனை செய்ய முயற்சித்தது. அப்போது நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததால் விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை மீறி சிறுக சிறுக 20 விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 7 விழுக்காடு பங்குகள் சலுகை விற்பனை என்ற அடிப்படையில் ரூ.226 விலையுள்ள பங்கை ரூ.212 க்கு விற்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள 6 கோடிக்கும் அதிகமான இப்பங்குகளை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளால் தான் வாங்க முடியும். ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ரூ.2000 கோடி நிதி தேவைக்காக 50 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நவ ரத்தின அந்தஸ்து பெற்று விளங்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்வது உள்நோக்கம் கொண்டது. தனி யார் மயமாக்கும் முயற்சியாகும். எனவே தேசத்தின் மின்சார தேவை யில் முக்கிய பங்கினை ஆற்றிடும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகள் விற்பனை அறி விப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாதவன் தெரிவித்துள்ளார்.