districts

கபாலீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட சிலை குளத்தில் புதைப்பு நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை, மார்ச் 1 - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோவில் குளத்தில் புதைக்கப் பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்து ள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழா  நடைபெற்றது. அப்போது, புன்னை வனநாதர்  சன்னதியில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும்  மயில் சிலை இருந்தது. அதன்பின் அந்த சிலை காணவில்லை. அதற்கு பதிலாக பாம்பை  அலகில் வைத்திருக்கும் மயில் சிலையை  புதிதாக வைத்துள்ளனர். இது ஆகம விதிக ளுக்கு முரணானது எனக் கூறி, திருவரங் கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் செவ்வாயன்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது,  அறநிலையத் துறை தரப்பில், புன்னை வனநாதர் சன்னதியில் அருகில் மலருடன் தான் மயில் சிலை இருந்தது என்பதற்கு எந்த  புகைப்பட ஆதாரமும் இல்லை என தெரி விக்கப்பட்டது. காவல் துறை தரப்பில்  ஆஜரான அரசு  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில்சிலை கோவில் குளத்தில் புதைக்கப்பட்டிருப்பது விசாரணை யில் தெரியவந்துள்ளது. சிலையை கண்ட றிய குளத்தை தோண்டலாமா அல்லது  வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் உதவியை காவல்துறை நாடி யுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப் பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப் படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.