திருவண்ணாமலை,டிச.15- வருகிற ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்து வோம் என்று நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்தார். நில அளவைத் துறையில் களப் பணி யாளர்கள் பணி சுமை, நீண்ட நாட்களாக பதவி உயர்வுகள் வழங்கப்படாதது, தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் மறு நில அளவை இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையை மாற்றி, நவீன மறு நிலவைத் திட்டத்தை 38 மாவட்டத்திலும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளுக்காக நில அளவை அலு வலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜா திருவண்ணா மலையில் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “ மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தால் வட்டாட்சியர் அலுவலகங்களில் நில அளவை பிரிவில் பணிகள் நடைபெறாமல் வெறிச்சோடியது”என்றார். எங்களது நியாயமான கோரிக்கையை தீர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முறையீடு செய்து வரு கிறோம். பலமுறை பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆனால், கோரிக்கைகள் உதாசீனப்படுத்த படுகிறது. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில பொறுப்பாளர்களை அரசு அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வருகிற ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.