சென்னை, டிச. 17- குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குவைத் மன்னர் மறைவையொட்டி ஞாயிறன்று ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, குவைத் மன்னர் ஷேக் நவாப் அஹ்மத் ஜாபர் சபாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.