districts

img

விஐடியில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

வேலூர், ஆக.9- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பாக சீனியர், ஜூனியர், இளையோருக்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி ஆகஸ்ட் 9 முதல் 11 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  650 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தொடக்க விழா வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ஆக. 9  அன்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணை தலைவரும்,வேலூர் மாவட்ட பளு தூக்கும் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலை வகித்தார். விஐடி பல்கலைக்கழக வேந்தர், வேலூர் மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் நிறுவனர் மற்றும் முதல் தலைவருமான டாக்டர் கோ.விசுவநாதன் துவக்கி வைத்தார்.  பல்வேறு பிரிவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆக.11 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி  பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.