districts

img

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள்

சென்னை,அக்.18- ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள், இதய உட்புகுத்து ஆய்வகம், கண் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் கண் தான வங்கி ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று (அக்.17) திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது, உலக விபத்து விழிப்புணர்வு நாள்  ஆண்டுதோறும் அக்டோபர் 17 தேதி  அனுசரிக்கப்படுகிறது.விபத்து நிகழாமல் இருக்க சாலை விதி முறைகளை பின்பற்றவும், விபத்து நிகழ்ந்தால் முதலுதவிசெய்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்னுயிர் காப்போம் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி யில் கடந்த டிசம்பர் முதல் கடந்த  செப்டம்பர் மாதம் வரை 1832  விபத்துநோயாளிகள் பயன்பெற் றுள்ளனர். மேலும் ரூ.1.51 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைகூடங்கள்
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி யில் மருத்துவமனையில் உபகரணங் கள் ரூ.2 கோடி செலவில், வாங்கப் பட்டு சிறுநீரகத்துறை, சிறுநீரக  மாற்று, ரத்த நாளம், புற்று நோய், நரம்பியல், இதயம் மற்றும்  ஆஞ்சியோ பரிசோதனை துறைக ளுக்கு வழங்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கண் வங்கி 
கண் தான வங்கி, கண் அறுவை  அரங்கத்திற்கு ரூ.1 கோடி செலவில்,  உபகரணங்கள் வாங்கப்பட்டு கண்  அறுவை அரங்கம் மற்றும் இரண்டாவது கண்தான வங்கி  திங்களன்று திறந்து வைக்கப்பட்டது.  கண் தானத்தை ஊக்கப்படுத்த வும்,இறந்தோர் கண்களில் இருந்து  எடுக்கப்படும் விழி வெண்படலங் கள் பாதுகாத்து வைக்க இந்த ஸ்டான்லி கண் தான வங்கி செயல் படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பு.பாலாஜி, துணை முதல்வர் ஜமீலா,  அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.