districts

பெண் ஒருவரிடம் செயின் பறித்து தப்பிய சீனிவாசனை போலீசார் மடக்கி பிடித்தனர்

சென்னை,ஜூலை 16-

    ராயபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் செயின் பறிப்பு வழக்கில் சேலத்தில் இருந்து கடந்த மே மாதம் புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது சீனிவாசன் தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே ஆழ்வார்திருநகர் பகுதியில் பெண் ஒருவரிடம் செயின் பறித்து தப்பிய சீனிவாசனை போலீசார் மடக்கி பிடித்தனர்.