districts

img

அனுசோனை தியாகி ஆதித்யவர்த்தன ஸ்ரீ நினைவஞ்சலி ஊர்வலம், பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.17– தியாகி ஆதித்யவர்த்தனஸ்ரீ-யின் 34ஆவது நினைவஞ்சலி கூட்டம்  அனுசோனையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றி யத்தில் உள்ள அனுசோனையில் 34 ஆண்டு களுக்கு முன்பு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் அமைத்து மக்கள் பிரச்சி னைகளுக்காகவும் அப்பகுதியில் நிலவி வந்த கந்துவட்டி, கள்ளச்சாராய கொடு மைகளுக்கு எதிராகவும் வாலிபர்களை திரட்டி போராட்டங்களை நடத்தியவர் தோழர் ஆதித்யவர்த்தன ஸ்ரீ. இந்த போராட்டங்களையும் வாலி பர்களின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத கந்து வட்டி கள்ளச்சாராய கும்பல் 17.1.1991 நடு இரவில் ஓட்டை பிரித்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்தது. அப்போது, தூங்கிக் கொண்டிருந்த தோழர் ஆதித்யவர்த்தன ஸ்ரீயை கொடூரமாக வெட்டிக் கொன்றது இந்த கும்பல். அவரது தியாகத்தை போற்றும் வித மாக மார்க்சிஸ்ட் கட்சி,வாலிபர் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகி ஆதித்யவர்த்தன ஸ்ரீயின் 34 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்  ஒன்றியச் செயலாளர் டி.ராஜா தலை மையில் அனுசோனையில் ஜன.17 அன்று நடைபெற்றது. வாலிபர் சங்க மாநில இணைச் செய லாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.தூருவாசன் ஆகியோர் நினைவு அஞ்சலி உரையாற்றினர்.  இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ஜெயராமன், சி.பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஆர்.நடராஜன், லெனின் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா, சீனிவாசன்,ஸ்ரீதர், இளவரசன், இடைக்குழு செயலாளர்கள் எம்.ஜி.நாகேஷ்பாபு, ஆர்.கே .தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தியாகி ஆதித்யவர்த்தன ஸ்ரீ இல்லத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை, ஓசூர் வட்டார கிளைகள் சார்பாக வெண் கொடியுடன் 40 வாலிபர்கள்  இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக பேரணியாக வந்து செவ்வஞ்சலி செலுத்தினர்.