மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் தோறும் வரவேற்பு குழு அமைக்கப்பட்டு மேலும் மாநாட்டு பணியிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதில், இரண்டாவது தவணையாக ரூ. 1 லட்சம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு. மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.