districts

img

சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சாலைப் பணிகளை துரிதப்படுத்துக

சிதம்பரம், ஜூன் 9- சிதம்பரம் நகரில் போக்கு வரத்து நெரிசலில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ரூ 40 கோடி யில் வெளிவட்டச் சாலை அமைக் கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் சுற்றுலாத்தலமாகும். இங்கு உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில்.அண்ணா மலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வ தற்கு  தினந்தோறும் பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிதம்பரம் நகரத்திற்கு வந்து செல்கிறார்கள். இதனால் சிதம்பரம் நகரத்திற்கு பேருந்துகள் உள்ளே வரும் வழியான வடக்கு மெயின் ரோடு,  கீழ வீதி, மேலவீதி உள்ளிட்ட முக் கிய இடங்களில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும்  மேலும்  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவதால் சிதம்பரம் நகரத்தில் நான்கு வீதிகளிலும் கூட்டம் அதிகரிக்கும் அப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில் அண்ணாமலை  நகரில் கடலூர் மாவட்ட அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை இயங்கி வருகிறது.  இந்த மருத்துவமனைக்கு தினம்  தோறும் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் மயிலாடு துறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்தும் அவசர  ஊர்திகள் மூலம் நோயாளிகள் வருகிறார்கள். இது போன்ற கூட்டநெரிசல் காலங்களில் விரை வில் மருத்துவமனைக்கு செல்ல  முடியாமலும்,  நெஞ்சு வலியால்  பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நேரத்தில் சிகிச்சைபெற முடியா மல்  உயிரிழப்பு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதற்கு  நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.   இதனை தொடர்ந்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே  பன்னீர்செல்வம் இதற்கு சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என சிதம்பரம் நகரத்தை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சிதம்ப ரம் வண்டிகேட் பகுதியில் உள்ள கும்பகோணம் போக்குவரத்து பணிமனை அருகில் இருந்து தில்லையம்மன் வாய்க்கால் கரையில் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு  பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சிதம்பரம் நகரத்திற்கு உள்ளே செல்லாமல் வெளிவட்ட சாலை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார்.  இதனையொட்டி அரசிடம் ரூ40 கோடிக்கு திட்ட மதிப்பீட்டில் அனு மதி பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  பணிகள்  நடைபெற்று வருகிறது.  இந்த பணி கள் தொடங்கி 2 மாதத்திற்கு மேல்  ஆகியுள்ள நிலையில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது என்றும்  மழை தொடங்கிவிட்டால் வாய்க்காலில் தண்ணீர் வந்து விடும் இதனால் பணிகள் முற்றி லும் பாதிக்கப்படும் எனவே பணியை மழை காலத்திற்குள் துரி தப்படுத்த வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.