புதுச்சேரி, ஜூலை 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகார் எதிரொளியாக குருவிநத்தம் கிராம கோவிலுக்கு சிறப்பு அதிகாரி நிய மிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி பாகூர் கொம்யூன் குருவிநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு, சட்டத்திற்கு மாறாக 13 ஆண்டுகளாக தொடர்ந்து பொறுப்பில் இருந்து வரு கின்றனர். அறங்காவலர் குழுவில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. எனவே புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும்.இந்து அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. பொறுப்பேற்பு இந்நிலையில் புதுச்சேரி அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் குருவிநத்தம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவைக் கூண்டோடு கலைத்துவிட்டு, கோவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு சிறப்பு அதிகாரியாக ஆசிரியர் லிங்குசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பாகூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில்குமார், முன்னிலையில் ஆசிரியர் லிங்குசாமி பொறுப்பேற்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கலியன், கமிட்டி உறுப்பினர்கள் சாம்பசிவம், வடிவேலு மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.