சென்னை மாநகராட்சி பொது சுகாதார மற்றும் சேவைகள் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு எர்ணாவூர் அம்மா உணவகம் அருகே நடைபெற்றது. முகாமை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிக் குழு உறுப்பினர்கள் அலமேலு, கருணாநிதி, வெங்கட்டையா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.