districts

img

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி

ராணிப்பேட்டை,ஜன.8-  ராணிப்பேட்டை மாவட்டம், அரக் கோணம் வட்டம், அரக்கோணம் (தெற்கு) உள்வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களை ஒருங்கிணைந்து பெருமுச்சி கிராமத்தில் புதனன்று (ஜன. 8) சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அரசினர் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமை யில் நடைபெற்ற  இம்முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு சக்கர நாற்காலி வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து, உடனடியாக கோரிக்கை மனுவை பரி சீலனை செய்து, ரூ. 10 ஆயிரம் மதிப்பி லான சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார். தொடர்ந்து 203 பயனாளி களுக்கு ரூ. 1 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரத்து 763 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சி யர் வெங்கடேசன், அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், அரக்கோணம் நகரமன்ற தலைவர் லஷ்மி பாரி, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதாலட்சுமி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் கலால் வரதராஜன், இணை இயக்குநர் வேளாண்மை அசோக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட சமூக நல அலு வலர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் செல்வி. அனுசியா, கால்நடைத் துறை உதவி இயக்குநர் மரு. திருநாவுக்கரசு, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, தாட்கோ மேலாளர் அமுதாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.