திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் அக்கிரகாரத்தில் உள்ள பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சித்த மையத்தை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சார் ஆட்சியர் (பொ) பானு, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செந்தில், வட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணன், விக்ரம் பிரபு ஆகியோர் உள்ளனர்.