ராணிப்பேட்டை, மே 21-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் திங்கட்கிழமை (மே 22) முதல் நடைபெற உள்ளது.
மாணவர்கள் தாங்கள் தவறிய பாடங்க ளுக்கு மறுதேர்விற்கு விண்ணப்பிக்கவும், மறுதேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள, ஆலோசனைகள் பெறவும், மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி வகுப்பு கள் நடைபெற உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.