தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி சான்றிதழ், உதவித் தொகை, ஓட்டுநர் உரிமம், பஸ் பாஸ், ரயில் பாஸ், ரேஷன் அட்டையை என்.பி.எச்.எச்.இல் இருந்து பி.எச்.எச்.ஆக மாற்றுவதற்கான சிறப்பு முகாம் ஆர்.கே.நகர் திருவள்ளுவர் நகரில் ஞாயிறன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், தில்ஷாத் பேகம், தேசப்பன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.